தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மராட்டிய மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்ய தாக்கரேவுக்கு இதுவரை Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தநிலையில் இனி Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
மராட்டிய சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா கட்சி சார்பாக வோர்லி தொகுதியில் இருந்து ஆதித்ய தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக திடீர் பதவியேற்பு, பதவி விலகல் ஆகிய பரபரப்புகளால், அந்த மாநிலத்தில் ஆட்சி அமைய ஒரு மாதத்துக்கும் மேல் ஆனது. இந்நிலையில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்சிபி), காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து ஆட்சி அமைத்தது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த X பிரிவு பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு இனி எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படாது என்று மராட்டிய மாநில அரசு அறிவித்துளளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.