தமிழகம் முழுவதும் அரசு டவுன் பஸ்களில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் வரும் உதவியாளர்கள் இலவசமாக பயணிக்க தனி டிக்கெட் வழங்கப்படுகிறது.
திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற உத்தரவை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் வரும் உதவியாளர் ஆகியோரும் கட்டணமின்றி பயணிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த இலவச பயணம் நடைமுறைக்கு வந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக பஸ் போக்குவரத்து இல்லாமல் இருந்த பேருந்து போக்குவரத்து தற்போது அனைத்து ஊர்களிலும் தொடங்கியுள்ளது.
இதனால், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் வரும் உதவியாளர்கள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்க தனி டிக்கெட்டை போக்குவரத்து கழகம் அச்சிட்டு, கண்டக்டர்களிடம் வழங்கியுள்ளது.
நகர பகுதியில் அரசு டவுன் பஸ்களில் ஏறும் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்களுக்கு கட்டணமில்லா பயணத்திற்கான டிக்கெட்டுகளை வழங்குகின்றனர்.
அந்த டிக்கெட்டுகளில், திருநங்கையை குறிப்பிடும் வகையில் திந எனவும், மாற்றுத்திறனாளியை குறிப்பிடும் வகையில் மா எனவும், மாற்றுத்திறாளியின் உதவியாளர் என்பதை குறிப்பிட மாஉ என அச்சிடப்பட்டுள்ளது.
மேலும், அத்துடன் கட்டணமில்லா பயணச்சீட்டு என்றும், மாற்றதக்கதல்ல, கேட்கும் பொழுது காண்பிக்க அல்லது கொடுக்கப்பட வேண்டும், பரிசோதனைக்க உட்பட்டது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.