சென்னை:-
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா காலத்தில் முறைகேடு நடந்தது உண்மை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய தமிழக அரசு உத்தரவிட்டது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
அதில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, விசாரணை ஆணையத்தின் அறிக்கை நகலையும், விரிவான பதில் மனுவையும் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி பார்த்திபன், சூரப்பா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதனிடையே அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, எனது பணியை மிக உயர்ந்த நேர்மையுடன் செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.