உலகம்

ஜெர்மனியில் வெள்ளப்பெருக்கு… பலத்த சேதம்…..!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெர்லின்:

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மழையால் நேற்றிரவு அஹர் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 6 வீடுகள் இடிந்து விழுந்தன.மேலும் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

At least 33 killed as heavy rains batter western Germany | Weather News |  Al Jazeera

வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியின்போது 2 தீயணைப்பு படை வீரர்கள் பலியாகி உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 30 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.ஒரு சில இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து, அதிலிருந்து வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

ALSO READ  இந்தியா மீதான தடையை நீக்கியது ஜெர்மனி :
At least 33 killed as heavy rains batter western Germany | Weather News |  Al Jazeera

வீட்டின் கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ள அவர்களை மீட்கும் பணி வேகமாக நடைபெறுகிறது. தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருடன், ராணுவமும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.வெள்ளப்பெருக்கால் ரெயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் ரைன் நதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நண்பரை வைத்து தேர்வு எழுதி கல்லூரியில் இடம் பெற்றவர் டிரம்ப்- ட்ரம்பின் அண்ணன் மகள் மேரி…! 

naveen santhakumar

குழந்தை பிறப்பதற்கு ஒருமணி நேரத்திற்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த அதிசயபெண்… 

naveen santhakumar

மக்களுக்கு இலவச ரயில் பயணம்!

Shanthi