உலகம்

குழந்தை பிறப்பதற்கு ஒருமணி நேரத்திற்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த அதிசயபெண்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜாவா:-

புராணங்களில் வருவதை போன்ற அதிசய சம்பவம் ஒன்று இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது.  பெண்மணி ஒருவர் கர்ப்பமான ஒரு மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்த அதிசய சம்பவம் இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் தாசிக்மலயா (Tasikmalaya) பகுதியை  சேர்ந்த பெண் ஹெனி நூரேனி (Heni Nuraeni) (28). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் தான் கர்ப்பம் என தெரிந்த ஒரு மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து அவர் உள்ளூர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில்:-

நான் வீட்டில் இருந்த போது, என் உடலில் முதலில் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. அதன் பின், திடீரென்று, என் வயிற்றின் வலது பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தேன். இதையடுத்து நான் என் தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். வயிற்றில் எனக்கு பிடிப்புகள் (Cramps) இருந்தன, இதையடுத்து ஒரு மணி நேரத்திற்குள் நாங்கள் மருத்துவர்களை அழைத்தோம், அதன் பின் குழந்தை பெற்றெடுத்தேன் என்று கூறியுள்ளார்.

ALSO READ  ஊரடங்கு: ஓட்டலில் உல்லாசம் அனுபவித்த ஜோடிக்கு 40 பிரம்படி....

மேலும், கடந்த ஒன்பது மாதங்களாக தவறாமல் தனக்கு மாதவிலக்கு ஏற்பட்டதாகவும், குழந்தை பெற்றெடுப்பதற்கு சற்று முன்பு கூட இரத்தப் போக்கு இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவிய பின், பண்டுங் ஹசன் சாதிகின் மருத்துவமனை (Bandung’s Hasan Sadikin Hospital) மகப்பேறு நிபுணர் டாக்டர் ருஷ்வானா அன்வர் (Dr Ruswana Anwar) கூறியதாவது:-

கர்ப்பமாக இருக்கும் 25,000 பேரில் ஒருவருக்கு இது போன்று நடக்கலாம் என்றும், பெண்கள் சில நேரங்களில் தாங்கள் கர்ப்பமாக இருப்பதையே அறிந்திருக்கமாட்டார்கள். இதற்கு புலனாகாத கர்ப்பம் (Cryptic Pregnancy) என்று பெயர். 

ஒருவேளை, அவர் எடையைக் கூடியிருக்கலாம், இதன் காரணமாக அவர் குழந்தையுடன் இருப்பதை உணராமல் இருந்திருக்கலாம். எவ்வாறு இருப்பினும் ஒரு பெண் கர்ப்பமாகி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிரசவம் செய்வது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார். இது ஒரு ரகசிய கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளாகவும் இருக்கலாம், எப்படியோ தாய், மகன் இருவரும் நன்றாக இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ALSO READ  அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட நபர்; ஈரான் அதிபராகிறார் இப்ராஹிம் ரைசி: யார் இந்த இப்ராஹிம் ரைசி?

இதற்கு முன்னர் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்த பாலே நடன ஆசிரியை லிஸி க்வா (Lizzie Quah) (23) என்பவர் சிறுநீரகக்கல் பிரச்சனை என்று மருத்துவமனைக்கு சென்ற போதுதான் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 மணி நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

மகாபாரதத்தில் குந்திதேவி சூரிய பகவானிடம் விளையாட்டாக தன் பெற்ற வரத்தை சோதிக்க வேண்டிய போது உடனேயை சூரிய பகவான் கர்ணனை மகனாக தந்தது தான் மேற்கண்ட கதைகள் கேட்கும் போது ஞாபகம் வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் அதிக கொரோனா மரணங்களுக்கு காரணம் வெண்டிலேட்டர்கள் தான்- மருத்துவர்கள் பகீர்…

naveen santhakumar

கட்டுக்கடங்காத தொற்று; மீண்டும் முழு ஊரடங்கு – அரசு முடிவு?

naveen santhakumar

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மந்திரி சபையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம் :

naveen santhakumar