மங்களூர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய்க்கு முழு உருவ சிலை செய்துள்ளனர். அந்த சிலையை விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் விஜய். தமிழகம் மட்டுமல்லாது கேரளா மற்றும் ஆந்திராவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் அதனை திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மங்களூரு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய்க்கு முழு உருவ சிலையை நிறுவியுள்ளனர். இந்த சிலையை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வவைத்தார்.
நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டேவுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சிலை மிகவும் அருமையாக உள்ளது, மங்களூர் விஜய் மக்கள் இயக்கத்தை நினைத்து பெருமையாக இருக்கிறது. விஜய் அண்ணாவை நேரில் பார்த்தது போன்றே இருக்கிறது. பீஸ்ட் மோட் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் நெட்டிசன்களோ, இது விஜய் சிலை என்று சொன்னால் விஜய்யே நம்ப மாட்டார். விஜய்க்கு உருப்படியாக சிலை செய்யவே மாட்டீர்களா? முன்பு சிலை செய்தபோதும் அது யார் போன்றோ இருந்தது. இது சத்தியமாக விஜய் சிலை இல்லை. பார்ப்பவர்களுக்கு அப்படி தெரியாது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.