பெங்களூரு:-
மறைந்த மூத்த நடிகர்களான எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் உள்பட பல நடிகர்களுடன் நடித்த நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவால் காலமானார்.
அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஜெயந்தி. எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
எம்.ஜி.ஆரு.டன் படகோட்டி, முகராசி மற்றும் ஜெமினி கணேசனுடன் கண்ணா நலமா, வெள்ளிவிழா, புன்னகை, இருகோடுகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்தார். பெங்களூரில் தனது மகன் வீட்டில் வசித்து வந்த ஜெயந்தி உடல்நலக்குறைவால் காலமானார்.
இவரது மறைவிற்கு திரையுலகினரும், ரசிகர்களும் அவரது மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.