தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தென் தமிழக மக்களால் ஏழைகளின் ரதம் என அழைக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் 40 வயதாகியுள்ளது.
கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டது. இது மீட்டர் கேஜ் ரயில் பாதை மூலம் பகல் நேர ரயிலாக ஓட தொடங்கியது.
வைகை எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டது தென் தமிழக மக்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. குறிப்பாக மதுரையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக வைகை எக்ஸ்பிரஸ் திகழ்கிறது என்பதே உண்மை.
வைகை எக்ஸ்பிரசில் இருக்கை வசதிகள் மட்டுமே கொண்டதாக இருந்தாலும் மக்கள் அதிகம் விரும்பி பயணிப்பது வைகை எக்ஸ்பிரஸ் தான். மிக குறைந்த நேரத்தில் மிக குறைத்து கட்டணம் மதுரையில் இருந்து சென்னைக்கு சென்று திரும்ப முடியும்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.