நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை பிடித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே என்பவர் கைது செய்தார். இவர் பிரபல மராத்தி நடிகை கிராந்தி ரேத்கரின் கணவர் ஆவார்.
ஆர்யன் கான் சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கினார். ஆர்யன் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அக்டோபர் 7ம் தேதி வரை (இன்று) போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரின் மகன் போதை வழக்கில் கைதானதால் இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் ஆர்யன் கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடேவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது. அவரை சிங்கம் போலீஸ் என்று இந்தி மீடியாக்களும், மக்களும் கொண்டாடுகின்றனர்.
இதனிடையே, தன் கணவரை நினைத்து மிகவும் பெருமையாக இருப்பதாக கிராந்தி பேட்டி அளித்துள்ளார். மேலும், அவர் தன் தனிப்பட்ட வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு நாட்டுக்காக சேவை செய்வதை பார்க்கும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. நான் வீட்டை கவனித்துக் கொள்வதால் அவர் தன் வேலையை நிம்மதியாக செய்கிறார் என்கிறார் கிராந்தி.