கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக கன்னட திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவரகொண்டா நடித்த டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் (தெலுங்கு) படங்களில் அவருக்கு ஜோடியாக இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். இப்படங்கள் வெற்றி பெற்றது. இதையடுத்து ராஷ்மிகாவுக்கு மவுசு கூடியது.
அவரது கால்ஷீட்டை பெறுவதற்காக பல தயாரிப்பாளர்கள் கோடிகளில் செக் எழுதி வைத்துக் கொண்டு அவரது பின்னாலேயே அலைந்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எந்த செக்கையும் வாங்கிப் போடாமல் மவுனம் காத்து வருகிறார்.
சிறிய ஹீரோக்களுடன் ஜோடி போடுவதை ராஷ்மிகா விரும்பவில்லையாம். அதனால் அதுபோன்ற வாய்ப்புகளுடன் வரும் தயாரிப்பாளர்கள் பெரிய சம்பளம் கொடுத்தாலும் அதை ஏற்க மறுத்து விடுகிறாராம். அதேசமயம், முன்னணி ஹீரோக்கள் படம் என்றால் மட்டுமே ராஷ்மிகா அதுபற்றி காதுகொடுத்து கேட்கிறார்.
ராஷ்மிகா தமிழில் கார்த்திக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் இவர் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், அதனை பணமாக பெற்றுக்கொள்வதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குடகு மாவட்டத்தில் உள்ள ராஷ்மிகா மந்தனாவின் பெங்களூரு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை 7.30 மணியில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் ராஷ்மிகா மந்தனா வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ராஷ்மிகாவுக்கு சொந்தமான திருமண மண்டபம் பெட்ரோல் பங்குகளிலும் இந்த சோதனையாந்து நடபெற்றிருப்பதாக இந்த சோதனையின் போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் வருகிற திங்கள் கிழமை பெங்களூருவிலுள்ள வருமான வரித்துறையினர் அலுவலகத்திற்கு ராஷ்மிகா தனது தந்தையுடன் ஆஜராகும்படி அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்மிகா தனது சொந்த ஊரில் சர்வதேச பள்ளி ஒன்றையும், பெட்ரோல் பங்கையும் தொடங்க விண்ணப்பித்திருக்கிறார் என்றும் இதனால்தான் சந்தேகமடைந்த வருமான வரி சோதனையினர் ராஷ்மிகா வீட்டில் திடீரென சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.