தன்னை மன்னிக்கும்படி தனது மகள் வரலட்சுமியிடம் நடிகர் சரத்குமார் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை, நீயா-2, சர்கார் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் லட்சுமி முதல் முறையாக தனது தந்தையும் நடிகருமான சரத்குமாருடன் இணைந்து “பிறந்தால் பராசக்தி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகை ராதிகா நடித்துள்ளார்.
இந்நிலையில் சினிமா துறையில் தனது மகளின் வளர்ச்சிக்கு தான் எத்தகைய உதவியும் செய்யவில்லை எனவும், சொந்த முயற்சியில் அவர் தன்னை தானே வளர்த்துக் கொண்டார் எனவும் சரத்குமார் கூறியுள்ளார்.
அவர் தைரியமானவர், தன் திறமையால் சினிமா துறையில் முன்னேறி வருகிறார் என பாராட்டியுள்ளார்.மேலும் வரலட்சுமி முதல் படமான போடா போடி ரிலீசாக தான் எத்தகைய உதவியும் செய்யவில்லை. அதனால் என்னை மன்னித்து விடும்படி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.