உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 பேருக்கு இருசக்கர வாகன மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
2021 – 2022 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10, 583 பேருக்கு, 4 கோடியே 76 லட்சத்து 73 ஆயிரத்து ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் பணியாளர்கள் வாங்கும் இருசக்கர வாகனங்கள் 125சிசி மிகாமலும், வாகன விதிமுறை சட்டம் 1998 பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 % அல்லது வாகனத்தின் விலையில் 25 ஆயிரம் ரூபாய் என எது குறைவோ அந்த தொகையை மானியமாக வழங்கப்படும்