தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘உன்னைச் சரணடைந்தேன்’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான சமுத்திரக்கனி, இதனைத் தொடர்ந்து ‘நெறஞ்ச மனசு’, ‘நாடோடிகள் 1 & 2, போராளி’, ‘நிமிர்ந்து நில்’ போன்ற சில படங்களை இயக்கியுள்ளார்.
சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘ரைட்டர்’. இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இவருடைய மகன் இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார். இந்நிலையில் அப்பாவைப் போலவே மகன் ஹரி விக்னேஷ்வரன் “அறியா திசைகள்” எனும் 40 நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார்.
வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன். இளைஞனாக நடிகர் – இயக்குனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் நடித்து இந்த குறும்படத்தை எழுதி இயக்கி உள்ளார்.
மிகவும் புத்திசாலித்தனமான கதை களம். நறுக்கிய வசனம். இசை கூடுதல் பலம். “அறியா திசைகள்” பலரின் பாராட்டுகளைப் பெற்றதுடன் சமூகவலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.