தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சந்திர கிரகணத்தின் எதிரொலியாக திருச்செந்தூர் கோவிலில் நாளை 7 மணி நேரம் நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை மதியம் 2.39 மணி முதல் மாலை 6.29 மணி வரை சந்திர கிரகணம் என்பதால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழக்கம்போல் அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்படும் என்றும், 4.30 மணிக்கு விஸ்வ ரூப தரிசனமும் 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும் எனவும், இதை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மாலை 7 மணிக்கு திறக்கப்படுவதாகவும், பின்னர் 7 மணிக்கு சம்ரோஷண பூஜையும், தொடர்ந்து அஸ்திர தேவருக்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்வும் நடக்க உள்ளதாகவும், கோயில் திறக்கப்படும் நேரத்தை அறிந்து பக்தர்கள் கோயிலுக்கு வர வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.