நடிகர் ரஜினியை தொடர்ந்து Man vs Wild நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் அடுத்தடுத்து கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Man vs Wild நிகழ்ச்சியையும், அதனை தொகுத்து பியர் கிரில்ஸையும் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காட்டுக்குள் சென்று அங்கு கிடைப்பதை உண்டு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்.
இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த நிகழ்ச்சி குழு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா ஆட்சியில் இருந்த போது பங்கேற்க வைத்தது . அதன்பின் கடந்த ஆண்டு இந்தியா வந்த Man vs Wild குழுவினர் பிரதமர் மோடியை உத்தரகாண்டில் உள்ள ஜிம் கார்பெட் பூங்காவிற்கு அழைத்து சென்று நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தனர்.
சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் சரணாலய பூங்காவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட Man vs Wild நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடிகர் அக்ஷய்குமார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து மேலும் சில பிரபலங்களிடம் நிகழ்ச்சி குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் இதில் விரைவில் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.