பிரபல வலைத்தள செயலியான TikTok-ல் இந்திய மக்கள் செலவழிக்கும் நேரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான TikTok செயலியால் பிரபலமானவர்கள் ஏராளம். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதில் தொடங்கி, வன்முறை வீடியோக்களை வெளியிடுவது வரை TikTok செயலியால் நிகழ்ந்த நிகழ்வுகள் ஏராளம்.
இந்நிலையில் செயலிகள் குறித்து ஆய்வுகளை செய்து வரும் App Annie நிறுவனம், 2019ல் மட்டும் இந்திய மக்கள் 5.5 பில்லியன் மணி நேரங்களை TikTok செயலியில் செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் 2018ம் ஆண்டில் இந்தியர்கள் 90 கோடி நேரத்தை செலவழித்த இந்தியர்கள் அதைவிட 6 மடங்கு அதிகமாக 2019ல் செலவிட்டுள்ளனர்.
இந்நிலையில் செயலிகள் குறித்து ஆய்வு செய்து வரும் App Annie நிறுவனம் TikTok செயலி குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இது 2018ம் ஆண்டை ஒப்பிடுகையில் 6 மடங்கு அதிகமாகும்.
2018ம் ஆண்டில் இந்தியர்கள் 90 கோடி நேரத்தை செலவழித்துள்ளனர். மேலும் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 40% இந்த செயலியை பயன்படுத்துப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.