ரயில் பயணங்கள் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதவை.இந்தியாவின் முதல் மின் ரயில் பம்பாய் முதல் கூர்லா இடையில் 1925-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கியது.
ரயில் பயணத்தின் கதை:
- 1853 ஏப்ரல் 14 அன்று நாட்டின் முதல் பயணிகள் ரயில் மும்பை-தானா இடையே 34 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கப்பட்டது.
- 1947-ல் இந்தியச் சுதந்திரத்தின் போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. 1951-ல் அவை தேசியமயமாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட பொழுது உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக உருவானது.
- இந்திய ரயில்வே ஆசியாவிலேயே மிகப்பெரிய அமைப்பாகும்.இது மொத்தமாக 1,27,760 கி.மீ நீள ரயில் பாதை கொண்டு உலகின் 3வது மிகப்பெரிய ரயில்வே என பெயர்பெற்றது.
- இந்திய ரயில்வே 1950ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது.
- முதல் ரயில்வே பட்ஜெட் 1925ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டத்தை அடுத்து இரயில் பாதை மின்மயமாக்கல் முதன் முதலாக பாம்பே விக்டோரியா நிலையத்தில் இருந்து குர்லா நிலையம் வரை 1925ம் ஆண்டில் பிப்ரவரி 3ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது.
- ரயில்வே ஊழியர்கள் கல்லூரி பரோடாவில் அமைந்துள்ளது.
- மேலும் 1977ல் உருவாக்கப்பட்ட டெல்லியில் அமைந்துள்ள தேசிய ரயில் அருங்காட்சியகம் ஆசியாவிலேயே மிகப்பெரிய ரயில் அருங்காட்சியகம் ஆகும்.
- இந்தியாவில் முதலாவது ரயில்வே சுரங்கப் பாதை பார்சிக் சுரங்கப் பாதை ஆகும்.இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதை ஹெளரா மற்றும் கொல்கத்தா மெட்ரோ இடையே ஹூக்ளி ஆற்றிற்கு அடியில் அமையவுள்ளது.
- 1856 தமிழ்நாட்டின் முதல் பயணிகள் ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை இயக்கப்பட்டது.
ஆனால் அதற்கும் முன்பே இந்தியாவின் முதல் ரயில் அன்றைய மெட்ராஸின் சிந்தாதிரிபேட்டையிலிந்து- செங்குன்றம் வரை இயக்கி பார்க்கப்பட்டது.
உலகின் முதல் மின்சார ரயில் 1879 ஆம் ஆண்டு பெர்லின் நகரில் வெர்னர் வான் செய்மென்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. எஞ்ஜினுடன் மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டு மணிக்கு 13கிமீ (13 km/hr) வேகத்தில் இயக்கப்பட்டது.
தமிழகத்தில் 1931ஆம் ஆண்டு ஏப்ரல் 2ல் அன்றைய மெட்ராஸில் பீச் ஸ்டேஷன் முதல் தாம்பரம் வரை இயக்கப்பட்டது. இது நாட்டின் மின்மயமாக்கப்பட்ட முதல் மீட்டர் கேஜ் இருப்பு பாதை ஆகும்.
மின்சார ரயில்கள் இல்லாத அன்றாட வாழ்க்கையை யோசித்து கூட பார்க்க முடியது.