இசை எங்கிருந்து பிறக்கிறது என்று ‘கிங்’ திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சுவை காட்சியில் வடிவேலு கிண்டலாக கேட்பார், அதற்கு ஒருவர் இசை எங்கிருந்து பிறக்கும் என்று கூறுவார். இந்த நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலம்.
ஆம், இசை எங்கிருந்து பிறக்கும், எதிலிருந்தும் பிறக்கும், யாரிடத்திலிருந்தும் பிறக்கும். இசைக்கு எல்லைகள் ஏதும் இல்லை.
வண்டு முரலும் ஓசை, மரங்கள் உரசும் ஓசை, குயில் கூவும் ஓசை, குழந்தையின் அழுகை எல்லாம் இசைதானே.
சரி, எல்லைகள் இல்லை. ஆனால் இசைக்கு அளவுகள் உண்டா என்றால்?
ஆம், உண்டு சப்த ஸ்வரங்களின் ஒவ்வொரு ஸ்வரத்திற்க்கும் ஒரு அளவுகோல் உள்ளது.
இசையின் அளவுகோலில் ஏழு ஸ்வரங்களும் ஒன்றுக்கொன்று ஒரு எளிமையான அதிர்வெண் விகிதத்தில் அமைந்துள்ளன.
இந்த அளவுகோலுக்கு டயடோனிக் (Diatonic) அளவுகோல் என்று பெயர்.
ஸ ரி க ம ப த நி என்பது தான் ஏழு ஸ்வரங்கள் அல்லது சப்தஸ்வரங்கள் ஆகும். இந்த ஸ்வரங்கள் அனைத்தும் டயடோனிக் அளவுகோலில் ஒரு எளிமையான விகிதத்தில் அமைந்துள்ளன.
‘ஸ’- 256 ஹெர்ட்ஸ்
‘ரி’- 288 ஹெர்ட்ஸ்
‘க’- 320 ஹெர்ட்ஸ்
‘ம’- 341.3 ஹெர்ட்ஸ்
‘ப’- 384 ஹெர்ட்ஸ்
‘த’- 426.7 ஹெர்ட்ஸ்
‘நி’-480 ஹெர்ட்ஸ்
மீண்டும் தொடரும் ‘ஸ’ 512 ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்டிருக்கும்.
எனவே இரண்டாவதாக வரும் ‘ஸ’ முதலில் வரும் ‘ஸ’ வை போல இரு மடங்கு அதிர்வெண் கொண்டது ஆகும். இந்த ‘ஸ-ஸ’ இடைவெளி ஆக்டேவ் (Octave) என்று அழைக்கப்படுகிறது.
ஆக்டேவ் என்றால் ‘எட்டு குறிப்புகளின் தொடர்’ என்று பொருள். நாம் நமது பள்ளி நாட்களில் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் படித்து இருப்போமே ஆக்டேன்கள் பற்றி. ஆக்டேன்கள் என்றால் எட்டு பிணைப்புகள் என்று பொருள்.
ஸ ரி க ம ப த நி எனும் சப்த ஸ்வரங்களில் ஒளிந்திருக்கும் அதிர்வெண் ரகசியம் இது தான்.