இந்தியாவில் பெண்களில் அதிக மது அருந்துவோர் பட்டியலில் அசாம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு தெரிவித்துள்ளது.இந்தியாவில் தமிழகம், கேரளா , தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அரசே மதுபானக் கடைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2015 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் குடும்பச் சுகாதார கணக்கெடுப்பு நடத்திய ஆய்வில், அசாம் மாநிலத்தை சேர்ந்த15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 26.3% பேர் மதுபானம் அருந்துபவர்களாக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கடந்த 14ஆண்டுகளில் இல்லாத வகையில் அசாம் மாநிலத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.அருணாச்சலப் பிரதேசத்தில் 15 வயது முதல் 49 வயது உள்ள 35.6% ஆண்கள் மதுபானங்களை குடித்து வருவதாக தகவல் வெளியாகிறது.
அதேபோல் வாரத்துக்கு ஒருமுறை மதுபானம் குடிக்கும் பெண்கள் பட்டியலிலும் அசாம் மாநிலத்தில் 44.8% புள்ளிவிரவப் பட்டியலில்முதலிடத்தில் உள்ளது.மேலும் சட்டீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இதன் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாககத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.