ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் சீரிஸ் லேப்டாப்புகளில் கீ போர்டுகளை உபயோகிக்க கடினமாக உள்ளதாக இயக்குனர் டைகா வைட்டிடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 92 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறந்த திரைக்கதைக்கான விருதை ” jojo rabbit” படத்திற்கு கிடைத்தது. ஆஸ்கார் விருதை அந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் டைகா வைட்டிடி பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய டைகா வைட்டிடி, ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் தன்னை மிகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும் அதனால்தான் பிசி கம்ப்யூட்டரை பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவிலேயே இதற்கு ஒரே தீர்வு ஆப்பிள் நிறுவனம் காணாவிட்டால் எங்களைப் போன்றவர்கள் பாடு திண்டாட்டம் தான் என தெரிவித்துள்ளார். மேலும் ஆப்பிள் கீபோர்டுகளை பயன்படுத்தி தனக்கு தோள்பட்டையில் மிகவும் வலி ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
விருது வழங்கும் விழாவில் பொது இடத்தில் வைத்து டைகா வைட்டி இப்படி பேசியது சினிமா உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.