மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ், கடந்த வருட இறுதியில் ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவை திருமணம் செய்துகொண்டார். இவர், தற்போது சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் முயற்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த நிலையில், இயக்குநர் விஷ்ணு வர்தன் கூறிய கதை பிடித்துப்போக, அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இயக்குனர் விஷ்ணு வர்தன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகினார். பில்லா, ஆரம்பம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் இயக்குனர் விஷ்ணு வர்தன்.
இவர் தற்போது இந்தியில் ‘ஷெர்ஷா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடித்துள்ளனர். இப்படத்தின் பணிகள் நிறைவு பெற்று ரிலீசிற்குத் தயாராகி வருவதால், ஆகாஷ் நடிக்கும் படத்தின் பணிகளை விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.