திரையுலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றுக்கு முன்னணி நடிகை ஒருவரும் ஆளாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று திரையுலகினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் படப்பிடிப்பு, டப்பிங் போன்ற பணிகளுக்காக வெளியே செல்லும் நடிகர்,நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக நாயகன் கமல் ஹாசன், வைகைப் புயல் வடிவேலு, இயக்குநர்கள் டி.பி.கஜேந்திரன், சுராஜ், நடிகைகள் த்ரிஷா மீனா, நடிகர்கள் சத்யராஜ், மகேஷ்பாபு, இசையமைப்பாளர் தமன் என கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்நிலையில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், தமிழக அரசியல் பரபரப்பான பிரபலமாகவும் வலம் வரும் குஷ்புவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, “கொரோனா இரண்டு அலைகளில் இருந்து தப்பித்தேன். நேற்று செய்த பரிசோதனையில் கூட நெகட்டீவ் என்று வந்துள்ளது. ஆனால் சளி உள்ளிட்ட நொந்தரவுகள் இருப்பதால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டேன். அடுத்த 5 நாட்களுக்கு எனக்கு நல்ல பொழுபோக்காக இருங்கள். மேலும் என்னுடன் மற்றவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்” என பதிவிட்டுள்ளார்.