தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
நடிகர் கார்த்திக்-ன் மகனான கௌதம் கார்த்தி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவராக இருக்கிறார்.
தேவராட்டம் படத்திற்கு பின் அவர் கைவசம் சிம்பு உடன் நடிக்கும் கன்னட ரீ-மேக்கான முப்டி மட்டுமே உள்ளது. இதுதவிர சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள டி.டி.கே சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கௌதம் கார்த்திக்கின் செல்போனை, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் பறித்து சென்றனர்.இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.