தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெகபதிபாபு. இவர் தமிழில் நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ‘மகா சமுத்திரம்’‘ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘மகா சமுத்திரம்’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் இதன் படப்பிடிப்புகள் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அழைத்தபோது நடிகர் ஜெகபதி பாபுவை அழைத்தபோது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால் ஷூட்டிங்குக்கு வர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெகபதி பாபுவின் இந்த முடிவால் ‘மகா சமுத்திரம்’ படக்குழு தற்போது வருத்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.