சினிமா தமிழகம்

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை:-

தமிழ்த் திரைப்பட நடிகையும் நாட்டுபுற பாடகியுமான பரவை முனியம்மா (76) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். 

தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பரவை முனியம்மா. இவர் விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். 

குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சிங்கம் போல’ என்ற பாடலின் மூலம் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து சுமார் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மான் கராத்தே’ ஆகும்.

ALSO READ  அரண்மனை 3 படம் ரிலீஸ் எப்போது? – தேதியை அறிவித்த குஷ்பு!

நடிகையாக அறிமுகமாகும் முன்பு நாட்டுப்புற பாடல்கள் மூலம் இவர்  பிரபலம். தமிழகம் தொடங்கி வெளிநாடுகளில் வரை இவருடைய நாட்டுப்புற மேடை கச்சேரிகள் மிகவும் பிரபலம். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

ALSO READ  கூகுள் குட்டப்பா- பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு சூர்யா உதவி

சில மாதங்களுக்கு முன்பு பரவை முனியம்மா காலமாகிவிட்டார் என்று செய்திகள் பரவின. அவை வெறும் வதந்தி தான். அவர் சிகிச்சைக்குப் பணமின்றி இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதனைதொடர்ந்து விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பண உதவி செய்தார்கள். இதனைத் தொடர்ந்து உடல்நலம் தேறி பேட்டிகள் கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெரிய நடிகர் படத்தில் நடிக்கும் வாணி போஜன் !

News Editor

இன்று முதல் 3 நாட்களுக்கு ரேஷன் நேரம் மாற்றம் …!

naveen santhakumar

ஒரு நாள் திருடலனா தூக்கம் வராது : போலீசை அதிர்ச்சியில் ஆழ்த்திய திருடன்

Admin