தமிழகம்

ஒரு நாள் திருடலனா தூக்கம் வராது : போலீசை அதிர்ச்சியில் ஆழ்த்திய திருடன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒரு நாள் திருடலனா தூக்கம் வராது : போலீசை அதிர்ச்சியில் ஆழ்த்திய திருடனின் வாக்குமூலம்…

40 திருட்டு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்ட திருடனை விசாரித்தபோது,திருடன் அளித்த வாக்கு மூலம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சேலத்தை அடுத்த சூரமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சென்று கொண்டிருந்த நபரை அழைத்து விசாரித்தனர் . அப்போது தான் தெரியவந்தது அவன் ஒரு மிகப் பெரிய கில்லாடி திருடன் என்று.

ALSO READ  வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. நடந்தது என்ன?

இவர் பெயர் அய்யந்துரை.40 நாட்களுக்கு முன்பு மத்திய சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.வெளியே வந்ததில் இருந்து 40 நாட்களில் 40 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார். அவரிடமிருந்து ரூ 70,000, 10 சவரன் நகை,6 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அந்த திருடனின் வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ  தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம்…!

தினமும் ஒரு இடத்தில் தங்குவதில்லை. பகல் முழுவதும் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இரவில் ஒரு வீட்டை தேர்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவாராம்.தான் 30 வருடங்களாக திருட்டு தொழில் செய்து வந்ததாகவும், ஒரு நாள் திருடவில்லை என்றாலும் தூக்கம் வராது என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்திற்காக கடல் கடந்து வரும் உதவிகள்; இந்தியாவை அசரவைத்த பி.டி.ஆர் !

News Editor

தமிழகம் முழுவதும் பீச், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

News Editor

கொரோனாவுக்கு ரெட் சிக்னல் காட்டிய சென்னை ரயில்வே !

News Editor