இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘கடலோரக்கவிதைகள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரேகா.அதே வருடத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அந்த திரைப்படத்தில் கமலஹாசனும் ரேகாவும் தற்கொலை செய்து கொள்வது போல் காட்சி இடம்பெற்றிருக்கும். இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கமலஹாசன் ரேகாவிற்கு லிப்லாக் கிஸ் அடிப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் காட்சிகளில் இந்த படத்திற்கும் இடம் உண்டு
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ரேகா அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் கமலஹாசன் தன்னிடம் லிப் லாக் கிஸ் காட்சி குறித்து எதுவும் கூறவில்லை என்றும் தன்னுடைய சம்மதம் இல்லாமலேயே இந்த காட்சி படமாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
பின்னர், தன் தாயாரிடம் தன்னை ஏமாற்றி முத்தம் கொடுத்து விட்டதாக கூறியதாகவும் அந்த பேட்டியில் கூறினார். ஆனால் ரசிகர்கள் யாரும் இந்த காட்சியில் தனக்கு சம்மதம் இல்லை என்பதை நம்பவில்லை என்றும்; இந்த சம்பவம் குறித்து அப்போதே ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாகவும் கூறினார். அதனால் கே.பாலச்சந்தர், கமலஹாசன் தன் மீது அப்போது கோபத்திலிருந்து இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தப் பேட்டி வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில் திடீர் திடீரென்று எதையெதையோ ட்ரெண்டாகும் நெட்டிசன்கள் திடீரென்று இந்த பேட்டியையும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.மேலும் நடிகை ரேகாவின் சம்மதம் இல்லாமல் அந்த காட்சி படமாக்கப்பட்டது தவறு என்றும் பல நெட்டிசன்கள் கருத்துக்களை அள்ளித் தெளித்து வருகின்றனர். புன்னகை மன்னன் திரைப்படத்தின் போது நடிகை ரேகாவிற்கு 16 வயது; அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.