நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
“மாநாடு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக தற்போது சென்னையில் முகாமிட்டுள்ள படக்குழு, படத்தில் இடம்பெற்றுள்ள இரவு நேரக் காட்சிகளை படமாக்கி வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு படப்பிடிப்பில் நடிகர் சிம்பு தரையில் படுத்து தூங்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து அத்துடன் சிம்புவை எளிய மனிதர் என குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிம்புவை பாராட்டி வருகின்றனர்.
#maanaadu #cinemaupdate #CinemaNews #maanaadu #simbu #silambarasan #venketprabhu #tamilmovie #tamilthisai #KalyaniPriyadharsan #Tamilmovie #cinema #CinemaUpdate #CinemaBuzz #kollywood #CineUpdate #CookWithComaliPugazh