சினிமா

இரண்டாவது முறையாக பிரபல நடிகருடன் இணையும் பிரியா பவானி சங்கர்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. ஹரி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில்  ஒருவர். இவர் சிங்கம், சாமி, பூஜை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார், அதனை தொடர்ந்து  கடைசியாக   நடிகர் விக்ரம் யை வைத்து சாமி ஸ்கொயர் என்ற படத்தினை எடுத்து இருந்தார், பின்னர் அந்த படம் நல்ல விமர்சங்கங்களுடன் வெற்றி பெற்றது.  

ALSO READ  மாஸ் காட்டும் முகேன் ராவ் - ’வேலன்’: மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

அதனை தொடர்ந்து சூர்யா நடிக்க ஞானவேல் ராஜா தயாரிப்பில் “அருவா” என்ற படத்தினை இயக்க ஒப்பந்தமானார், அதன் பிறகு படத்தின் முதல் கட்ட பணிகளையும் தொடிங்கினார் இயக்குனர் ஹரி. ஆனால் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிய ராஜ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதால், இப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை வைத்து புதிய படம் இயக்கவுள்ளார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘அருண் விஜய் 33’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் கதாநாயகி யார் என்று தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

ALSO READ  "கவனமாக இருங்கள்...எந்த நேரமும் நீங்கள் கொல்லப்படலாம்" : முதல்வருக்கு கொலைமிரட்டல்

அதன்படி நடிகை பிரியா பவானி சங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறியுள்ளது. இவர்கள் இருவரும் ‘மாஃபியா’ படத்தில் இணைத்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட பணிகளை முடித்துவிட்டு முன்னரே அறிவித்தது போல அடுத்த மாதம் படப்பிடிப்பை துவங்கவுள்ளது படக்குழு.

 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியாகியது “அந்தாதூன்” பட  தமிழ் ரீமேக் அப்டேட் ..!

News Editor

ஹே நான் ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன்.. கைதாகியும் அடங்காத மீரா மிதுன்…!

naveen santhakumar

மாஸ்டரை புகழ்ந்த சின்ன தல சுரேஷ் ரெய்னா.!

naveen santhakumar