இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக உள்ளார். இந்நிலையில் 48 வயதான கங்குலிக்கு நேற்று நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் அதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்தநிலையில் கங்குலி, தனது இதய நிலையை பரிசோதித்துக்கொள்ள மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவில்லை என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கங்குலியை பரிசோதித்த அப்பலோ மருத்துவமனை, சவுரவ் கங்குலி தனது இருதய நிலையைப் பரிசோதித்துக்கொள்ள வந்துள்ளார். அவரது இதயம் தொடர்பான முக்கிய அளவுகூறுகள் நிலையாக இருக்கின்றன என மருத்துவமனை தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2-ம் தேதி சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.