விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து “காத்து வாக்குல ரெண்டு காதல்” என்ற ஒரு புதிய படத்தினை உருவாக்கயுள்ளார். அந்த படம் பூஜையுடன் இன்று துவங்கப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரவும் மற்றும் ஒரு கதாநாயகியாக சமந்தாவும் நடிக்க உள்ளார்கள்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பினை பெற்றுருந்தது. இந்த நிலையில் தான் 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து வெளியான நானும் ரவுடி தான் படம் ஒரு வெற்றிப்படமாகவே அமைந்தது. அந்த படத்தில் நயன்தார காது கேட்காத பெண்ணாக நடித்து இருப்பார். காமெடி கலந்த கமர்சியல் படமாக வெளிவந்த இத்திரைப்படம் மக்கள் மத்தில் பெரும் வரவேற்பினை பெற்றது.
இந்த நிலையில்தான் மீண்டு விக்னேஷ் நயன்தாரா விஜய்சேதுபதி ஆகியமூன்றுபேரின் கூட்டணி வெற்றி பெருமை என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தயில் ஏற்படத் தொடங்கியுள்ளது. கடந்த பிரவரி 14 அன்று காத்து வாக்குல காதல் என்ற படத்தினை இயக்குனர் அறிவித்தார். காரோண காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் காதுவாக்குல ரெண்டு காதல் படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. பூஜையின் போது எடுக்கப்பட்ட விஜய்சேதுபதியும் விக்னேஷ்சிவனும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.