இந்த நவீன காலத்தில் அனைவரும் தங்கள் மொபைல் உடன் தான் பெரும்பாலும் குடும்பம் நடத்தி வருகின்றனர் சிறு குழந்தைகள் முதல் பல்லு போன பெரியவர்கள் வரை மொபைலில் பயன்படுத்துகின்றனர் அந்த அளவிற்கு நமது அன்றாட வாழ்வில் இன்றியமையாத இடத்தினை மொபைல் பிடித்துள்ளது.
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வளர்ச்சி ஏற்பட்டாலும் அதற்கு நேர்மாறாக தீமைகளும் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. பலரது மூளையே மொபைல் தான் என்ற நிலைமை வந்து விட்டது.
மொபைலின் மூலம் நமது தகவல்கள் திருடப் படுவதாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டேதான் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னர் பத்து இலக்கங்களுக்கு குறைவாக நம்பருடன் மொபைலுக்கு அழைப்பு வந்தால் அதனை அட்டென்ட் செய்யும்பொழுது மொபைல் வெடித்து உயிர் சேதம் ஏற்படும் என்றும் கூட சில வதந்திகள் பரவலாகப் பேசப்பட்டன.
அதனை தொடர்ந்து, டெபிட், கிரெடிட் காடுகளில் பணம் எடுக்க வங்கியிலிருந்து அழைப்பதாக கூறி நமது ஓடிபி(OTP) எண்ணை கேட்டு கொள்ளையடிக்கும் முயற்சி அரங்கேறின.
தற்போது அடுத்தகட்ட கொள்ளையடிக்கும் முயற்சியாக இரவு நேரங்களில் + 92 என்ற இலக்கத்தில் ஆரம்பமாகும் எண்ணிலிருந்து அழைப்பு வருகிறதாம், அதனை நாம் அட்டென்ட் செய்தால் அடுத்த நொடியே நமது வங்கி குறித்த செய்திகள் திருடப்படுகிறதாம். எனவே மக்கள் அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மேலும் இந்த எண்ணில் இருந்து மிஸ்டுகால் அல்லது போன் வந்தால் பொதுமக்கள் அட்டென்ட் செய்ய வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர்கோஸ்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.