பிரபல நடிகையாக இருப்பதனால் தான் என்னவோ தனது சுதந்திரம் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதிய நடிகை சமந்தா, சமீபகாலமாக தனது நெருங்கிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஒரு புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.
அதாவது தனக்கு யார் போன் செய்தாலும், அதற்கு முன்னரே அவர்களது பெயரை மெசேஜ் மூலம் அனுப்பிவிட வேண்டுமாம். அதற்கு பின்னரே அவர் அவர்களது அழைப்பை ஏற்பாராம் அல்லது அவரே அவர்களுக்கு திரும்பி அழைப்பு விடுப்பாராம்.
சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாலும், உணவு டெலிவரி செய்ய வரும் நபர்களாலும் எப்படியோ அவரது மொபைல் நம்பர் சில பேருக்கு தெரிந்து விடுவதால், அடிக்கடி புது எண்களில் இருந்து அழைப்பு வருகிறதாம்.
அத்தகைய அழைப்பானது அவருக்கு வேண்டிய நபரா????? இல்லையா???? என்கிற குழப்பம் சமந்தாவுக்கு ஏற்படுகிறதாம். முக்கியமான அழைப்பாக இருக்குமோ???? என நினைத்து அப்படிப்பட்ட அழைப்புகளை அட்டென்ட் செய்து பேசியபோது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தொடர்ந்து தான் இந்த முடிவுக்கு வந்தாராம் சமந்தா. இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.