மகாராஷ்டிரா:
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஆசிரியை ஒருவரின் செயல் நெட்டிசன்கள் பெருமளவில் ஈர்த்துள்ளது.
இந்த காலகட்டத்தில் அனைத்து துறைகளும் முடங்கிக் கிடந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது பல நிறுவனங்கள் செயல்பட தொடங்கிய நிலையிலும்,கல்வி நிறுவனங்கள் எதுவும் திறக்கப்பட அனுமதிக்கவில்லை. அதனால் ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த ஆசிரியை ஆன்லைனில் பாடம் கற்பிக்க 2 டப்பாக்களை அருகருகே வைத்து, அதன்மீது குளிர்சாதன பெட்டியில் உள்ள கண்ணாடித் தட்டை வைத்து, தட்டின் மீது செல்போன் மற்றும் கற்பிப்பதற்கு தேவையான பேப்பர்களையும் வைத்து பாடம் நடத்தியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தொலைபேசியை கையில் பிடித்துக் கொண்டு பேசும் சிரமம் இல்லை,அதுமட்டுமல்லாது மாணவர்களுக்கு தெளிவாக புரியும் வகையில் ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது.இவ்வாறு வித்தியாசமான முறையில் அமைந்துள்ளதால், ஆசிரியையின் ஐடியா விற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம்