இந்தியா

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி எந்த நடிகையின் கணவர் தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை பிடித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே என்பவர் கைது செய்தார். இவர் பிரபல மராத்தி நடிகை கிராந்தி ரேத்கரின் கணவர் ஆவார்.

Exclusive: Sameer Wankhede is sacrificing his personal life, kids for the  nation and I am proud of him, says wife and Marathi actress Kranti Redkar -  Times of India

ஆர்யன் கான் சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கினார். ஆர்யன் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அக்டோபர் 7ம் தேதி வரை (இன்று) போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரின் மகன் போதை வழக்கில் கைதானதால் இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ  ஹாரன், சைரன் தொந்தரவு இல்லை - இனி காதுகளுக்கு இனிமையாக ஒலிக்கும்: மத்திய அரசு திட்டம்

அதேசமயம் ஆர்யன் கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடேவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது. அவரை சிங்கம் போலீஸ் என்று இந்தி மீடியாக்களும், மக்களும் கொண்டாடுகின்றனர்.

இதனிடையே, தன் கணவரை நினைத்து மிகவும் பெருமையாக இருப்பதாக கிராந்தி பேட்டி அளித்துள்ளார். மேலும், அவர் தன் தனிப்பட்ட வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு நாட்டுக்காக சேவை செய்வதை பார்க்கும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. நான் வீட்டை கவனித்துக் கொள்வதால் அவர் தன் வேலையை நிம்மதியாக செய்கிறார் என்கிறார் கிராந்தி.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு பிப்ரவரி 1ம் தேதி தூக்கு

Admin

நீட் தேர்வு-காதல் தோல்வி…..ஹெச்.ராஜா கேள்வி..

naveen santhakumar

வயிற்று வலியால் துடித்த இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி:

naveen santhakumar