காக்கிநாடா
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைகழகம் அமைந்துள்ளது. பல்கலையின் விருந்தினர் மாளிகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் புதுமண தம்பதியின் முதலிரவுக்காக வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் பெண்கள் அதிகாரமளித்தல் துறை தலைவராக உள்ள ஸ்வர்ணகுமாரி என்பவர் பெயரில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைகழக விருந்தினர் மாளிகையில் உள்ள அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.
புதுமண தம்பதியின் முதலிரவுக்காக பல்கலைக்கழக ஊழியர்கள் சிலரே அலங்காரம் செய்ததுள்ளனர். அறையை பயன்படுத்திய தம்பதியினரும் அறை அலங்காரத்தை வீடியோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்தனர். இதன் மூலம் அறை வாடகைக்கு விடப்பட்டது வெளி உலகிற்கு தெரிய வந்தது.
இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீனிவாசராவ் கூறுகையில், பேராசிரியரின் மாணவருக்காக அந்த அறையை, பல்கலை ஊழியர் முன்பதிவு செய்துள்ளார்கள் . ஆனால், அறையை தவறாக பயன்படுத்தி உள்ளார்கள்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.