ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ளவர்கள் கடந்த ஒரு மாத காலமாகப் பயன்படுத்திவரும் மிக முக்கிய செயலி ஜூம் (ZOOM) ஆகும். காணொலிக் கூட்டம், தனியாக சாட் செய்வது, மெசேஜ் அனுப்புவது, ஆன்லைன் வகுப்பு உள்ளிட்ட அனைத்துக்கும் இந்தச் செயலி எளிதாகப் பயன்படுவதால் பலரும் இதை விரும்பி டவுன்லோடு செய்தனர்.
சென்னை காவல்துறை அதிகாரிகளே தங்களுக்குள் ஜூம் செயலி மூலம் தகவல் பரிமாறிக்கொள்வதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்தச் செயலியைப் பயன்படுத்துவது எளிதானது என்பதாலும், புதிதாக கணக்கு தொடங்க வேண்டியதில்லை என்பதாலும் கடந்த ஒரு மாதத்தில் 60 மில்லியனுக்கும் மேல் இந்தச் செயலி டவுன்லோடு செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து (Work From Home) வருகிறார்கள். தற்போது வெளியில் செல்லவும் நண்பர்களை காணவோ முடியாமல் தவித்து வருகிறார்கள். அதற்கு தீர்வாக இந்த செயலி உள்ளது இந்தியாவில் வாட்ஸ் அப் மற்றும் டிக் டாக்-ஐ தாண்டியுள்ளது இது ஜூம் செயலி.
எந்த நாடு கொரோனா வைரஸை உலக நாடுகளுக்கு கொடுத்ததோ அதே நாடு தான் இந்த Zoom செயலியையும் கொடுத்துள்ளது. இந்த மொபைல் செயலி தற்பொழுது மிகப் பிரபலமாக இருக்கிறது என்றாலும் இந்த செயலியை கடந்த 2011-ம் ஆண்டே உருவாக்கப்பட்டது.
சிஸ்கோ (CISCO) நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் எரிக் யுவான் (Eric Yuan) என்பவர் இந்த செயலியை சிஸ்கோ நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய 40 பொறியாளர்களுடன் இணைந்து உருவாக்கினார்.
தற்போதைக்கு உள்ள மொபைல் செயலிகளில் 10 பேருக்கு மேல் வீடியோ காலிங் கில் இணையும் வசதி உள்ள ஒரே செயலி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது செயலில் கிட்டத்தட்ட 50 பேர் வரை ஒரே நேரத்தில் வீடியோ காலில் இணைய முடியும்
ஆனால் இதே செயலி தற்பொழுது பிரச்சனையையும் சந்தித்து வருகிறது இந்த செயலியில் தனிநபர்களின் தகவல்கள் திருடப்படும் தனிநபர் உரிமைக்கு எந்தவித உத்தரவாதம் இல்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகர அட்டர்னி ஜெனரல் லெடிடியா ஜேம்ஸ் (Letitia James) நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த செயலி மூலமாக பல்வேறு மால்வேர்கள் கணினிகளை தாக்குவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அமெரிக்காவின் புலனாய் நிறுவனமான FBI இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலமாக வீடியோக்கள் திருடப்படுகிறது என்று கூறி உள்ளது மேலும் இந்த செயலியை Zoom-Bombing என்று கூறியுள்ளது.
இதனிடையே இந்த செயலியின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான எரிக் யுவான் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளார் இதுதொடர்பாக விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த செயலியை உலகின் பல முன்னணி தலைவர்கள் மற்றும் முன்னணி பிரபலங்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க முன்னாள் மத்திய வங்கி தலைவர் ஆலன் கிரீன்ஸ்ஸ்பேன் (Alan Greenspan) கூட இந்த செயலியை பயன்படுத்தி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வரும் சூழலில் அலுவலக கூட்டம், மாணவர்களுக்கு பாடம் என பல பணிகளும் ZOOM செயலி மூலம் நடத்தப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுக்க ZOOM செயலியில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து ZOOM செயலி பாதுகாப்பானது இல்லை என்றும், அது சைபர் தாக்குதல்களுக்கு எளிதில் இலக்காகும் தன்மை கொண்டது என்றும் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், தனிநபர்கள் ஜூம் (ZOOM) இணையவழி சந்திப்புத் தளத்தை, பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் ஒருங்கிணைப்பு மையம் (CyCord), அறிவுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அலுவலக நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடிய தளம் இதுவல்ல என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல் ஆவணம், இந்திய கணிப்பொறி அவசரகால மறுமொழி குழு (Indian Computer Emergency Response Team(Cert-In))வெளியிட்ட முந்தைய அறிவுரைகளைக் குறிப்பிட்டிருப்பதோடு, ஜூம் (ZOOM) பாதுகாப்பான தளம் அல்ல என்றும் கூறியுள்ளது.