குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிங்கினார்.
குஜராத் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, ஆளுநர் ஓ.பி.கோஹ்லியிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
அதேபோல துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் தங்களின் ராஜினாமாவை வழங்கினர். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு அமையும் வரையில் காப்பந்து அரசாக நீடிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த முறையும் விஜய் ரூபானியே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்பது யார் என்பது இன்று மாலை தெரியவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் என்ன காரணத்துக்காக ராஜினாமா செய்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும் டெல்லியின் உத்தரவின் பெயரிலே ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபகாலத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா மூன்றாவது பாஜக முதல்வர் விஜய் ரூபானி ஆவர்.
முன்னதாக உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.