ஜான்ஸி:-
உத்திரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் திறந்த நிலை ஜிம் ஒன்றிலிருந்து வெளியாகியிருக்கும் வீடியோ அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியிருக்கிறது.
ஜான்சி, நந்தன்பூராவில் உள்ள கன்ஷிராம் பூங்காவில் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு புல் -அப்ஸ் இயந்திரங்கள் புறவிசையின்றி, மனிதர்கள் யாரும் இல்லாமல் தானாக இரண்டு புல் – அப்ஸ் இயந்திரங்கள் மட்டும் மேலும் கீழும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இது குறித்து பிரபல நடிகர் விவேக் ஓபராய்-ம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்:-
இந்த வீடியோ குறித்து காவல் அதிகாரிகள் கூறுகையில்:-
சம்பந்தப்பட்ட பூங்காவில் திறந்தவெளியில் உள்ள இரண்டு புல் – அப்ஸ் இயந்திரங்களில் அளவுக்கு அதிகமாக கிரீஸ் பூசப்பட்டுள்ளது. அதனால், ஒரு முறை அதை இயக்கினால் அடுத்த சில வினாடிகளுக்குத் தானாகவே இயங்குகின்றன. அதைத்தான் ஒரு சிலர் விஷமத்தனத்துடன் ‘பேய்கள் ஜிம் பயிற்சி செய்கின்றன’ என்று வீடியோ செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியிருக்கிறார்கள். பேய் வீடியோவை வெளியிட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.