திருநெல்வேலி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6-வது அணுஉலை அமைப்பதற்கான கட்டுமான பணி இன்று தொடங்கியது.
இந்திய அணுசக்தி துறை செயலாளரும், அணுசக்தி வாரிய தலைவருமான கே.என்.வியாஸ் மும்பையில் இருந்தப்படி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அணு உலை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
கூடங்குளம் பாதுகாப்பானது, 1,2 அலகுகள் ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் திறன் கொண்டவை என்றும்
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது உலைகளின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அணுசக்தித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகள் திட்டமிட்டபடி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் ஐந்தாவது மற்றும் ஆறாவது அலகுகள் ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் திறன் கொண்டதாக இருக்கும். கட்டுமான பணி 75 மாதங்களில் அவை நிறைவடையும் அணுசக்தித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடுமன்றத்தில் அறிவித்தபடி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6-வது அணுஉலை அமைப்பதற்கான கட்டுமான பணி இன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.