கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 5 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 3 ரூபாய் அதிகரித்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டிலேயே மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உச்சபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.20க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.98.67க்கும் விற்பனை ஆகிறது.
அடுத்தபடியாக, மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் – ரூ.107.83க்கும், டீசல் ரூ.97.45க்கும், ஹைதராபாத்தில் பெட்ரோல் ரூ.105.83க்கும், டீசல் – ரூ.97.96க்கும், பெங்களூருவில் பெட்ரோல் ரூ.105.25க்கும், டீசல் ரூ.95.26க்கும், சென்னையில் பெட்ரோல் ரூ.102.49க்கும், டீசல் ரூ.94.39க்கும், டில்லியில் பெட்ரோல் ரூ.101.84க்கும், டீசல் ரூ.89.87க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில், பெட்ரோல் லிட்டர் ரூ.102.49-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.39-க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக இதர அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், சாமானிய மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.