தமிழகத்தில் தனியார் ரயில்களை அனுமதிப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் அவை செயல்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் குறிப்பிட்ட வழித்தடங்களில் தனியார் ரயில்களை அனுமதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களை இணைக்கும் வகையில் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான நிறுவனங்களை இறுதி செய்யும் பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மும்பை, மங்களூரு, செகந்திராபாத், டெல்லி ஆகிய நகரங்களுக்கு தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை மண்டலத் திட்டத்தைப் பொறுத்தவரையில் ரூ.3,221 கோடியில் 1,052 கிலோமீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்படவுள்ளது.
இது மும்பை மண்டலத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய திட்டமாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் தனியார் ரயில்களுக்கான முனையமாக தாம்பரம் செயல்படும் என்றும், பராமரிப்பு மையமாக தண்டையார்பேட்டை செயல்படும் என்றும் கூறப்படுகிறது.