இந்தியாவில் சமீபகாலமாக சமூக ஊடகங்கள் மற்றும் மக்களால் மிக பிரபலமாக பேசப்பட்ட ஒரு பெயர் சோனு சூட். ஹிந்தி நடிகரான சோனு சூட் அனைவராலும் புகழப்பட்டார்.
இந்த கொரோனா காலகட்டத்தில் பலரும் பல விதமான இன்னல்களை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர். வடமாநிலங்களுக்கு மற்றும் வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்றவர்களும் கொரோனா பிரச்சனை காரணமாக சொந்த ஊர் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது.
இதனை அறிந்து, உடனே சூப்பர் ஹீரோவாக மாறிய சோனு சூட் அந்தத் தொழிலாளர்கள் அவரவர்கள் சொந்த ஊருக்கு சென்றடைய விமானம் மற்றும் பேருந்தினை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். இதன் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த குறைவான காலகட்டத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ரயில் பேருந்து மற்றும் விமானம் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
ரஷ்யாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படித்து வந்த தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர் இதனையறிந்த சூழ்நிலை தனி விமானம் வரவைத்து அவர்களை அங்கிருந்து தமிழகத்திற்கு வர வைத்தார்.
மேலும் விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து உதவியுள்ளார் அதுமட்டுமல்லாது ஒரு குழந்தையும் சிகிச்சைக்கும் உதவியுள்ளார்.
இத்தகைய உதவிக்கரம் நீட்டும் சோனு சூட் விடம் ஒரு பெண் கலாய்த்திருக்கிறார், அவருக்கு தக்க பதிலடி கொடுத்து தெறிக்க விட்டிருக்கிறார், நமது சூப்பர் ஹீரோ சோனு சூட்.
டுவிட்டரில் மஞ்சு ஷர்மா என்ற பெண் “எனது போனில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க முடியுமா??” என்று சோனு சூட்டை கேலி செய்யும் விதமாக ட்வீட் செய்துள்ளார்.
அதற்கு “இப்போது நான் ஒரு பெண்ணின் கம்ப்யூட்டரை சரி செய்து கொண்டிருக்கிறேன் மற்றும் ஒரு பெண்ணின் திருமணத்தை முடித்து வைக்கவேண்டும் பிறகு ஒரு வீட்டின் குழாயில் நீர் வர வைக்க வேண்டும் போன்ற பிரச்சனைகளில் பிஸியாக இருக்கின்றேன் அதனால் நாளை காலை வரை நீங்கள் பொறுத்துக் கொள்ள முடியுமா??” என்று சோனு சூட் பதில் ட்வீட் செய்துள்ளார்.
இவ்வாறு உதவும் மனப்பான்மை கொண்டவர் இடம் கேலி செய்யும் விதமாக கேள்வி எழுப்பியுள்ளது வருந்தத்தக்கது,இருப்பினும் இதனை சோனு சூட் கையாண்ட விதம் பாராட்டதக்க வகையில் அமைந்துள்ளது.