இந்தியா

மனைவியை விவாகரத்து செய்தாலும் குழந்தைகளை பராமரிக்கும் கடமை தந்தைக்கு உள்ளது-உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் குழந்தைகளை விவாகரத்து செய்ய முடியாது.குழந்தைகளை பெற்றவர் என்ற முறையில் அவர்களை பராமரிக்கும் கடமை தந்தைக்கு உண்டு என என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனைவியை விவாகரத்து செய்த கணவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு 4 கோடி ரூபாய் வழங்க குடும்ப நல நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. ஆனால் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டும் கணவர் பணத்தை தரவில்லை.

இதையடுத்து மனைவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். கணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவாகரத்து செய்யும் போது குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக வியாபாரம் சரிவர நடக்கவில்லை. எனவே குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்ட 4 கோடி ரூபாயை தர முடியுவில்லை என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் சந்திரசூட் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். ஆனால் குழந்தைகளை விவாகரத்து செய்ய முடியாது.

ALSO READ  கொரோனோ வைரசால் உயிரிழந்தால் நான்கு லட்சம் இல்லை- மத்திய அரசு திடீர் பல்டி. 
மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க 12 பேர் குழு: உச்ச நீதிமன்றம் நியமனம்  | supreme court - hindutamil.in

குழந்தைகளை பெற்றவர் என்ற முறையில் அவர்களை பராமரிக்கும் கடமை தந்தைக்கு உண்டு. எனவே குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்ட 4 கோடி ரூபாயை மனைவியிடம் வழங்க முடியாததற்கு நிதி நெருக்கடி என கூறும் காரணத்தை ஏற்க முடியாது.

ALSO READ  நேபாளத்தின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பாவை நியமனம்- உச்ச நீதிமன்றம் அதிரடி

ஆகவே செப். 1ம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாயையும் செப். 30ம் தேதிக்குள் 3 கோடி ரூபாயையும் விவாகரத்து செய்த மனைவியிடம் வழங்க கணவருக்கு உத்தரவிடப்படுகிறது என நீதிபதிகள் சந்திரசூட் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குறைந்தளவு பார்வையாளர்களுடன்  51 வது சர்வதேச திரைப்படவிழா நடத்தப்படும் :  பிரகாஷ் ஜவடேகர்

News Editor

காங்கிரசிலிருந்து விலகினார் ஜோதிராதித்ய சிந்தியா- ம.பி.ல் கவிழுமா காங்கிரஸ்…???

naveen santhakumar

நவ. 28: பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

naveen santhakumar