ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழாவை கொரோனா காரணமாக இந்த ஆண்டு குறைந்தளவு பர்வையாளர்களுடன் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
டெல்லியில் சர்வதேச கொரோனா வைரஸ் குறும்படவிழாவில் 108 நாடுகளில் இருந்து கொரோனாவை பற்றி 2,800 குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.இது மக்களின் அபரிவிதமான திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது, என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் 51வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நடத்தப்படவுள்ளது. இதில் ஆரம்பம்மற்றும் இறுதி நிகழ்வு குறைந்தளவு பார்வையாளர்களுடன் நடத்தப்படும். இத்திரைப்பட விழாவை மக்கள் ஆன்லைன் மூலம் பார்க்கலாம். இந்த சர்வதேச திரைப்பட விழாவில், 21 ஆவணப் படங்களும் இடம் பெறும்.’ என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். பின்னர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்