இந்தியா

சொந்த குழந்தையை கடலில் வீசி கொன்ற தாய்..கள்ள காதலால் நிகழ்ந்த கொடூரம்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரள மாநிலம் உள்ள கண்ணூர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் சரண்யா, பிரனவ். இவர்களுக்கு ஒன்றரை வயதில் வியான் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று, நள்ளிரவில் தங்கள் குழந்தையை காணவில்லை என இருவரும் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தினர் குழந்தையின் சடலம் அவர்கள் வீட்டு அருகே உள்ள தையில் கடற்கரையில் கிடைத்துள்ளது. பிரேத பரிசோதனையில் குழந்தை தலையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

ALSO READ  5 மாத குழந்தையின் உயிர்காக்க 6 கோடி ரூபாய் வரி ரத்து; பிரதமர் மோடி அதிரடி!

காவல் துறை தாயிடம் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்கு பின்னாக பதிலை கூறியுள்ளார். அதன் பின்னர் வீட்டை சோதனை செய்ததில், கடல் மண் துகள்கள் அவரின் போர்வையின் மீது இருந்தது. போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கோண்டார்.

தனக்கு வேறு ஒருவருடன் தவறான தொடர்பு இருந்ததாகவும், தற்போது கணவரை விட்டு தனது தாய் வீட்டில் வசிப்பதாகவும் கூறினார். சம்பவத்தன்று தனது கணவரை தன் தாய் வீட்டுக்கு வரவழைத்து குழந்தையை கொன்று அவர் மீது பழி போட முடிவு செய்து கொன்றதாக கூறினாள்.

ALSO READ  1xbet Casino México Bono De Bienvenida $40, 000 Mx

மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தில், நள்ளிரவில் குழந்தையை கடற்கரைக்கு அழைத்து சென்றேன். அங்கு கடற்கரை பாறையில் அடித்து, கடலில் தூக்கி வீசிவிட்டு, வீட்டுக்கு வந்து தூங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

10 Лучших Онлайн Казино В Казахстане Рейтинг Казин

Shobika

1вин Официальный Сайт Казино Играть На кварплат

Shobika

அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 43 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று !

News Editor