இந்தியா

குஜராத்தில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிரா- உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

இந்தியாவில் உள்ள ஹரப்பா கால நகரான தோலாவிராவை உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாவது,

ஹரப்பா நாகரீகத்தில் தோலாவிரா முக்கியமான நகர்ப்புற மையமாக இருந்தது. நமது பழங்காலத்துடன் மிக முக்கிய தொடர்புகளைக் கொண்டவைகளில் ஒன்றாக உள்ளது. இது கண்டிப்பாகக் காண வேண்டிய இடம், குறிப்பாக வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு.

மாணவப் பருவத்தில், நான் முதன் முதலாக தோலாவிரா சென்றேன். அந்த இடம் என் மனதைக் கவர்ந்தது.

ALSO READ  huawe நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

குஜராத் முதல்வராக, தோலாவிராவை பாரம்பரிய இடமாகப் பாதுகாப்பது மற்றும் புனரமைப்பது தொடர்பானப் பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பை பெற்றேன். இங்கு சுற்றுலாவுக்கு ஏற்ற உள்கட்டமைப்புகளை உருவாக்க நமது குழுவும் பணியாற்றியது.’’ என்று தெரிவித்துள்ளார்.

சிந்துசமவெளி மக்களின் வாழ்வியலை இன்றளவும் தோலாவிரா பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. தோலாவிரா என்பது சதுப்புநிலமாக பாலைவனமாக விரிந்து பரந்து கிடக்கும் குஜராத்தின் ரான் ஆப் கட்ச் என்ற பகுதியின் நடுவே உள்ளது.தோலாவிராவின் மிகப் பெரிய ஆச்சரியமே பிரமாண்ட நீர் சேமிப்பு கட்டமைப்புதான்.

ALSO READ  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கையில் அழியாத மை - மராட்டிய அரசு முடிவு

தோலாவிரா நகரத்தின் கட்டமைப்பு இன்றைய நவீனத்தைவிட மிக அற்புதமானதாக திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கிறது. சிந்துசமவெளி மக்கள் எப்படியான உச்சநிலை பண்பாட்டில் வாழ்ந்தனர் என்பதை பாலைவனத்துக்கு நடுவே சாட்சியமாக நின்று சொல்கிறது இந்த தோலாவிரா.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காங்கிரஸ் கவுன்சிலரின் கண்டுபிடிப்பு: ரம்முடன் தினமும் ஆம்லேட் போதும் கொரோனா ஓடிவிடும்… 

naveen santhakumar

உடற்பயிற்சி செய்தால் platform ticket இலவசம் … எங்கு தெரியுமா?

Admin

ரஃபேல் போர் விமானத்தில் எழுதப்பட்டுள்ள RB என்பதன் அர்த்தம் என்ன??? 

naveen santhakumar