மும்பை:-
இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் திரைத்துறை பிரபலங்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால் பலர் தங்கள் வீட்டு வேலை, தோட்ட வேலை மற்றும் வயல் வேலை உள்ளிட்டவற்றை செய்து வருகிறார்கள். அதன்படி நடிகர் சல்மான் கான் கூட தனது பண்வெல் (Panvel) பண்ணை தோட்டத்தில் உள்ள வயல்களில் விவசாயம் செய்து வருகிறார்.
அதன்படி நடிகர் வித்யுத் ஜம்வால் தனது வீட்டில் மாடுகளை வளர்ப்பது தோட்ட வேலைகள் செய்வது என்று பிஸியாக உள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் வித்யூத் ஜம்வால் மாட்டுவண்டி ஒன்றை தனது கைகளில் கட்டிக்கொண்டு தானாகவே இழுத்த புகைப்படங்கள் வைரலானது.
வித்யுத் ஜம்வால் தமிழில் பில்லா-2, துப்பாக்கி, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று உடற்பயிற்சி செய்வது. இந்த கொரோனா ஊரடங்கால் ஜிம்கள் மூடபட்டுள்ளதால், வீட்டில் இருந்தபடியே எவ்வாறு உடற்பயிற்சி செய்வது என்பது குறித்த வீடியோவையும் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.