444 பணியிடங்களுக்கான காவல் உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று(25.06.2022) தொடங்கியது.
தமிழகம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் உட்பட 2 லட்சத்து 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எழுத்து தேர்வு இன்று(ஜூன் 25) காலையும், மாலையும் தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வில் காவல்துறையில் வேலைசெய்பவர்களுக்கு 20 சதவீதம் இட ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர்களுக்கு நாளை எழுத்து தேர்வும், தமிழுக்கான தகுதி தேர்வும் தனியாக நடைபெறும் என்றும் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெறவுள்ள 197 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.