தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமை இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக முத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டும் மேற்கு வங்க மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடதுசாரிகட்சிகளுடன், கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இது குறித்து பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, மேற்குவங்க மாநிலத்தில் முதலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்த மம்தா பானர்ஜி, தற்போது அந்த கட்சியை எதிர்க்க முடியாமல் தவிக்கிறார். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இடதுசாரிகட்சிகளுடன் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் தலைமை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, பாஜகவை நிச்சயம் காங்கிரஸ் கூட்டணி வெல்லும்’என அவர் கூறியுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.